100% தேர்ச்சி : அரசு பள்ளி தலைமையாசிரியர்களை கௌரவித்த ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த இரண்டு அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களை ஆட்சியர் சுப்புலட்சுமி பாராட்டி கௌரவித்தார்.

Update: 2024-05-08 07:59 GMT

தலைமையாசிரியர்களுடன் ஆட்சியர் சுப்புலட்சுமி 

வேலூர் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டு அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்தது. அதனை பாராட்டும் விதமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இரு பள்ளி தலைமை ஆசிரியர்களையும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உடன் இருந்தார்.
Tags:    

Similar News