செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு.

Update: 2023-11-29 07:14 GMT


செம்பரம்பாக்கம் ஏரி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000  கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீராதாரமாக உள்ள ஏரிகள் மழையால் நிரம்பி உள்ளது. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நேற்றைய தினத்தில் செம்பரம்பாக்கம் ஏறியிலிருந்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.  தற்போது நீர் வரத்து அதிகரிப்பால், 1000 அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருளத்தூர், திருமுடிவாக்கம், வழுதளம்பேடு, காவலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22.25 அடியை ஏட்டியுள்ளது.
Tags:    

Similar News