105 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

நத்தம் அருகே புகையிலை விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-24 02:31 GMT

பைல் படம் 

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நத்தம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நத்தம் அருகே மதுரை சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் உள்ள கடைகளில் காவல் உதவியாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து புகையிலை பொருட்கள் வைத்திருந்த மதுரை மாவட்டம் ,மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 36) என்பவரை கைது செய்த நத்தம் போலீஸார் அவரிடமிருந்து 105 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News