108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது வழியில் பிறந்த பெண் குழந்தை.ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு
108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது வழியில் பிறந்த பெண் குழந்தை ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.;
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி கற்பகம். நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டது இதனால் பதற்றம் அடைந்து உறவினர்கள் 108 கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கற்பகத்திற்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸில் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் செல்லும் வலியில் கற்பகத்திற்கு அதிகப்படியான வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கமல விநாயகி ஊர்தி ஓட்டுநர் இரா .மகேந்திரன் உதவியுடன் பிரசவம் பார்த்தார் பிரசவத்தில் கற்பகத்திற்கு பெண் குழந்தை பிறந்தது. பிறகு ஜெயங்கொண்டம் அரசு தலமை மருத்துவமனையில் தாயும் சேயும் சேர்க்கப்பட்டனர் பரிசோதித்த மருத்துவர் தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் பாரட்டு தெறிவித்தனர்