ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை

குமாரபாளையத்தில் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-11 05:50 GMT
மாணவர்களுக்கு வாழ்த்து
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் தருண் நல்லசாமி 492, பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி ரேஷ்மிகா 488 பெற்று இரண்டாமிடமும், மாணவி ரக்சனா 487 பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதம், 10, அறிவியல் 1, சோசியல் 1, முறையே 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 1, 480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணாக்கர்களையும், பாட ஆசிரியர் பெருமக்களையும் தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி, பொருளர் கந்தசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின் உள்பட பலர் பாராட்டினர்..
Tags:    

Similar News