எடப்பாடி அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
எடப்பாடி அடுத்த செட்டிங்குறிச்சி பகுதியில் வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித் ததால் மகள் விபரீத முடிவு;
Update: 2024-03-30 01:58 GMT
அரசு மருத்துவமனை
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் கல் உடைக்கும் தொழிலாளி இவரது மனைவி வெள்ளையம்மாள் இவர்களுக்கு செல்வி(17)என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி செல்வி வீட்டு வேலை செய்யவில்லை என தாய் கண்டித்துள்ளார். இதில் விரக்தி அடைந்த செல்வி விஷத்தை குடித்து வாந்தி எடுத்துக் கொண்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.