தூய்மை பணிக்காக கீழப்பாவூா் பேரூராட்சிக்கு12 பேட்டரி வாகனங்கள்

நிகழ்ச்சியில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-18 07:19 GMT

தூய்மை பணிக்கு கீழப்பாவூர் பேரூராட்சிக்கு 12 பேட்டரி வாகனங்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணிக்காக 12 பேட்டரி வாகனங்கள் இயக்கிவைக்கப்பட்டன. இதையொட்டி, கீழப்பாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சா.ஞானதிரவியம் எம்.பி. பேட்டரி வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வாழ்த்திப் பேசினாா். திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், பேரூராட்சி உறுப்பினா்கள் ராதா விநாயகப்பெருமாள், கோடிஸ்வரன், மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். இதில் பேரூராட்சி செயல்அலுவலா் மாணிக்கராஜ் வரவேற்றாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News