ரூ.1.47 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடியில் ஆறு கூடுதல் வகுப்பறைகள்கொண்டமிடி கட்டிடம் கட்டுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் .ஸ்ரீகாந்த் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கூடுதல் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.