போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் 15 பேர் கைது

வலி நிவாரணி மாத்திரையை போதை மருந்தாக பயன்படுத்தி விற்பனை செய்து வந்த 15 பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர்

Update: 2024-03-06 04:43 GMT

வெப்படை 

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள மயான முட்புதற்களில் போதை மாத்திரைகளும் ஒரு முறை பயன்படுத்தும் ஊசிகளும் இருப்பதாக வெப்படை தனிப்பிரிவு காவலருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது சில இளைஞர்கள் இரவு நேரங்களில் திரண்டு தங்களுக்கு போதை வருவதற்காக மாத்திரையை நீரில் கரைத்து ஊசியாக தங்கள் நரம்புகளில் செலுத்திக் கொள்வது தெரிய வந்தது.

இதுகுறித்து வெப்படை போலீசார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரிவித்ததை அடுத்து 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கட்டிட வேலைக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் பெறப்படும் வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து தங்கள் கைகளில் இன்ஜெக்ஷன் மூலம் செலுத்தி போதை வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது .

இதனையடுத்து சந்தேகப்பட்டு கிரி ஹரண் 26 சாமான்டூர், சுஜித் 26 பள்ளிபாளையம், கௌரி சங்கர் 21 கலியனூர் , தீபன் 21 சாமான்டூர் ,நந்தகுமார் 19 ராசிபுரத்தானூர், விக்னேஷ் 24 அந்தியூர்,கௌதம் குமார் 32, இலியாஸ் உல்லா (27) சங்ககிரி ,சுஜித் 21 ராசிபுரத்தானூர் 3) யுவராஜ் 24 ராசிபுரத்தானூர் ,கௌதம் 23 மறவம்பாளையம் தான் காடு , லட்சுமண் 22 பள்ளிபாளையம்,  கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த சுமார் 15 கட்டிட கூலிதொழிலாளார்கள் இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக, தங்கள் நரம்புகளில் செலுத்தியதை ஒப்புக்கொண்டனர் . இதற்கான மருந்துகளை குஜராத்தில் செயல்படும் நிறுவனத்தில் ஆன்லைனில் பெற்று ஒருவருக்கொருவர் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 10,000 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர் .இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் என கூறப்படுகிறது.. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட 15 நபர்களும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதைக்கு அடிமையான கட்டிட கூலி தொழிலாளர்கள் வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக பயன்படுத்தியது தனியார் மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

Tags:    

Similar News