வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

இளையான்குடியில் பொதுமக்களை விரட்டி வெறிநாய் கடித்ததில் 15 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-07 08:02 GMT
சிகிச்சை பெற்று வருவோர் 
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் வெறிநாய் ஆபத்து குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலா் சைபுல்லாஹ் உள்ளிட்ட நிா்வாகிகள் பேரூராட்சி நிா்வாகத்திடம் மனு கொடுத்து, வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில், இளையான்குடி அருகே அரணையூா், கரும்புக்கூட்டம், பூச்சியேந்தல், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெறி நாய் பொதுமக்களை விரட்டிக் கடித்தது. இதைப் பாா்த்து அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். வெறி நாய் கடித்ததில் மொத்தம் 15 போ காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த சம்பவம் அறிந்த இளையான்குடி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை உத்தரவின் பேரில், துப்புரவுப் பணியாளா்கள் வெறி நாயைப் பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.
Tags:    

Similar News