ஊதியூர் அருகே சேவல் வைத்து சூதாடிய 17 பேர் கைது

ஊதியூர் அருகே சேவல் வைத்து சூதாடிய 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-24 15:06 GMT

காங்கேயத்தை அடுத்த‌  ஊதியூர் அருகே தட்டாரவலசு, ரத்தினசாமி சுள்ளிக்காட்டுத் தோட்டத்தில் சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது‌. இதனை அடுத்து போலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேடிச் சென்ற போலிசார் 17 பேரை சம்பவ இடத்தில் மடக்கி பிடித்தனர்.

இதனை அடுத்து சட்டத்திற்கு புறம்பாக சேவல் சண்டையில் ஈடுபட்ட கொடுவாயை சேர்ந்த நாகராஜ் 41, அரசம்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் 43, பல்லடத்தை சேர்ந்த பிரதாப் ராஜா 24 மற்றும் சின்னதுரை 48, களிமேடை சேர்ந்த கோபால் 57, குண்டடம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி 57, திருப்பூர் பொள்ளிக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி 50, தாராபுரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி 42, காடையூரைச் சேர்ந்த விஜயகுமார் 33, அருள்புரத்தை சேர்ந்த சுப்ரமணி 49, அழகுமலையைச் சேர்ந்த கார்த்திகேயன் 42, திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த சிவகுமார் 46, கொடுவாய் நிழலியைச் சேர்ந்த மகேஸ்வரன் 37, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த முத்துசாமி 45, கொடுவாயை சேர்ந்த சம்பத் 29, திருப்பூர் வடமலை பாளையம் பகுதியைச் சேர்ந்த சுனீஷ் 40,  கொடுவாய் நிழலியை சேர்ந்த ரத்தினசாமி 55 ஆகிய 17 நபர்களின் மீதும் போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து சேவல் சண்டை சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சுமார் 4 சேவல்களும், பணம் ரூ. 2000 மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News