வேலூர் மாவட்டத்தில் 17 மதுவிலக்கு வழக்குகள் பதிவு

வேலூர் மாவட்டத்தில் இன்று காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் 17 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-27 09:57 GMT

சாரயங்கள்

வேலூர் மாவட்டத்தில் இன்று காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் 17 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளச்சாராயம் சுமார் 65 லிட்டர் ,மற்றும் 86 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது 17 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது போன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News