மாமல்லையில் 2 பயணியருக்கு கால் முறிவு

மாமல்லபுரத்தில், நேற்று ஒரே நாளில் வெண்ணெய் உருண்டை பாறை நடைபாதையில் நடந்த சுற்றுலா பயணிகள் இருவருக்கு, தடுமாறி கீழே விழுந்ததில், காலில் முறிவு ஏற்பட்டது.

Update: 2023-12-23 05:28 GMT
மாமல்லபுரத்தில், நேற்று மாலை, வெண்ணெய் உருண்டை பாறை நடைபாதையில், சர்வதேச பயணியர் குழுவினர் நடந்து சென்றனர். அப்போது, வெளிநாட்டு பெண் பயணி, நடைபாதையில் தடுக்கி விழுந்ததால், அவரின் கால் முறிந்தது. பிற்பகல், கடற்கரை கோவில் அருகில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆதிபராசக்தி பெண் பக்தர்கள், கடலில் குளித்தனர். அப்போது ஒருவர் தவறி விழுந்து, கால் முறிந்தது. அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைத்து, அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News