சிவகங்கையில் 2 பேருக்கு டெங்கு ; மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை மாவட்டத்தில் 2 பெண்களுக்கு டெங்கு - மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

Update: 2023-11-29 16:19 GMT

சிவகங்கையில் 2 பேருக்கு டெங்கு ; மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சல் பாதித்த 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் காய்ச்சல் பாதித்த 55 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் 23 மற்றும் 30 வயதுள்ள இரண்டு பெண்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து சிறப்பு முகாம்கள் மூலம் காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் கவனம் காட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News