பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது!

வேலூரில் பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-20 15:50 GMT

வேலூரில் பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அரும்பருதி காந்திநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வேலூரை சேர்ந்த உதயா (23), வசந்தபுரத்தை சேர்ந்த சூர்யா (20) ஆகியோர், திடீரென சந்திரசேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயா, சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News