மார்த்தாண்டம் அருகே 2000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே 2000 கிலோ ரேசன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-21 10:35 GMT

பறிமுதல் செய்த கார்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக-கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜ சேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழுவினர் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் சென்றார். உடனே அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்று சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கல்லுவிளை பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த ரேஷன் அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News