2013-பேட்ச் காவல்துறையினர் 25லட்சம் நிதி உதவி

பண உதவி செய்த அனைத்து 2013-பேட்ச் காவல்துறையினருக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.

Update: 2024-09-01 08:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
2013-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த காவல்துறையினர் உடல்நலக் குறைவாலும் எதிர்பாராத விபத்துகளாலும் இறக்க நேரிடும் சக காவல்துறையினரின் குடும்பத்தின் சூழ்நிலை கருதியும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும் சமூக வலைதளங்களாகிய what's app மற்றும் Telegram மூலம் குழுவாக ஒன்றிணைந்து 2013-பேட்ஜ் காவல்துறையினர் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி கொடுத்து அதன் மூலம் ரூபாய் 25லட்சம் நிதி திரட்டப்பட்டது. அதனை மதுரையில் விபத்தினால் இறந்த மதுரை மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு முதல் நிலை காவலர்-3376 தெய்வத்திரு. காளிமுத்து அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி இன்று காளிமுத்து குடும்பத்ற்கு நேரில் சென்று கொடுக்கப்பட்டது. நிதி உதவியை பெற்றுக்கொண்ட காளிமுத்து குடும்பத்தார்கள் எனது மகனுக்கு இறைவன் நல்ல ஆயுளைக் கொடுக்காவிட்டாலும் இந்த காவல்துறையில் நல்ல நண்பர்களை கொடுத்துள்ளார் என மன நெகிழ்ச்சியுடன் கூறினர். மேலும் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதியும் எங்களது குழந்தையின் எதிர்காலம் கருதியும் பண உதவி செய்த அனைத்து 2013-பேட்ச் காவல்துறையினருக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.

Similar News