2021 ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
அனைத்து பணியாளர்களுக்கும் சொந்த மாவட்டங்களில் அருகாமையில் பணி நியமனம் செய்ய வேண்டும், தகுதியுள்ள களப்பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு துறை இணை பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2021 ம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும் சொந்த மாவட்டங்களில் அருகாமையில் பணி நியமனம் செய்ய வேண்டும், தகுதியுள்ள களப்பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.