கடலூரில் 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை
கடலூரில் 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
By : King 24x7 Website
Update: 2023-12-12 07:47 GMT
கடலூரில் 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 12 பேர், சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 பேர், அரசு மருத்துவமனையில் 3 பேர், கடலூர் தனியார் மருத்துவமனையில் 5 பேர் என மொத்தம் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.