24 மணி நேரமும் மழை நிலவரம் கண்காணிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மழை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நிலை அலுவலர்களும் தங்களுக்கு உரிய பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

Update: 2024-01-09 15:27 GMT

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 

திருவாரூர் அருகே குடவாசல் வட்டம் வெள்ளை அதம்பார்க் கிராமத்தில் திருமழைராஜன் ஆற்றங்கரையில் நீர் கசிவு ஏற்படும் இடங்களில் ஆற்றங்கரை தெருவில் தண்ணீர் புகுந்துவிடாமல் மணல் மூட்டைகள் கொண்டு அலுவலர்களால் சரி செய்யப்பட்டன. மாவட்டத்தில் மழை குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது தேவையான நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நிலை அலுவலர்களும் தங்களுக்கு உரிய பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News