பைக் விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலி !

ஆலங்குளம் அருகே பைக் விபத்தில் நண்பர்கள் 3 பேர் உயிரிழந்தார்கள்.

Update: 2024-04-06 10:03 GMT

விபத்து

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை கிராமம் சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகன் ராஜா (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மூர்த்தி (வயது 23), பேச்சி என்பவரது மகன் ஆனந்தன் (வயது 27). இவர்கள் 3 பேர்களும் நண்பர்கள். இவர்கள் புல்லுக்காட்டு வலசை கோவில் கொடை திருவிழாவுக் காக தங்களது நண்பரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியைச் சேரந்த மாரியப்பன் என்பவரது மகன் ராமர் (வயது 23) என்பவரை அழைத்துக் கொண்டு இரண்டு பைக்குகளில் புல்லுக்காட்டு வலசை நோக்கி நள்ளிரவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாவூர்சத்திரம் அருகே தென்காசி நெல்லை நெடுஞ்சாலையில் கேடிசி நகர் பகுதியில் 2 பைக்குகளும் சென்ற போது எதிரே வந்த பாவூர்சத்திரம் மேலப்பாவூர் ரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (வயது 30) என்பவரின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது நண்பர்கள் ராஜா, மூர்த்தி, ஆனந்த், ராமர், ஆகிய நான்கு பேர்களும் படுகாயம் அடைந்த நிலையில் திருநெல்வேலி பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராமர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஆனந்தும் உயிரிழந்தார்.
Tags:    

Similar News