ஐயப்ப பக்தர்களை தாக்கிய 3 காவலாளிகள் கைது

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்களை தாக்கிய 3 காவலாளிகள் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-12-14 01:02 GMT

ஐயப்ப பக்தர்களை தாக்கிய 3 காவலாளிகள் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கும், கோவில் காவலர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஆந்திராவை சேர்ந்த சென்னாராவ், சந்தாராவ் சந்தா, கட்டா ராமு ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் 3 காவலாளிகளுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் காவலாளிகள் பரத், செல்வா, விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், கோவில் காவலாளிகளை தாக்கியதாக ஆந்திர பக்தர்கள் சென்னாராவ் உள்ளிட்ட சில பக்தர்கள் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News