வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 பேர் கைது
பெரம்பலூரில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 பேரை தலைவாசலில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 06:23 GMT
வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 பேர் கைது
பெரம்பலூர் நகர போலீஸ் நிலைய எல்லையில் ராகுல் என்கிற வெங்கடேசன் (வயது 25) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மோட்டார் சைக்கிளை விரட்டி வந்தனர். தலைவாசல் நோக்கி மோட்டார் சைக்கிள் வந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று தலைவாசல் போலீசார் மும்முடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை பெரம்பலூர், தலைவாசல் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 3 பேர் கைது அப்போது அவர்கள் திருவள்ளூர் சங்குப்பேட்டையை சேர்ந்த சிவா என்கிற மார்க்கெட் சிவா (20), பெரம்பலூர் கம்பன் நகரை சேர்ந்த தாஸ் என்கிற தசரதன் (19) பெரம்பலூர் தம்பிராய்பட்டி பகுதியை சேர்ந்த அஜித்(20) ஆகியோர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை பெரம்பலூருக்கு அழைத்து சென்றனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.