குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது

புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை (குட்கா) விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-01 07:01 GMT

காவல் நிலையம் 

புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பு சப்- இன்ஸ்பெக் டர் செல்லத்துரை தலை மையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பைங்குளம் பகுதியில் சரோஜா என்பவரின் கடையில் இருந்து 15 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கீழ்குளம் பகுதி செல்வன் என்பவரிடம் இருந்து 34 பாக்கெட் புகையிலை பொருட்களும், முஞ்சிறை தோட்டவரம் பகுதி சுசிலா என்பவரிடம் இருந்து 48 பாக்கெட் புகை யிலை பெருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டன.
Tags:    

Similar News