நாகர்கோவிலில் 30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்

நாகர்கோவிலில் 30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க மேயர்  அடிக்கல் நாட்டினார். 

Update: 2024-02-27 03:34 GMT
துணை சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பல  பகுதிகளில் நகர் நலவாழ்வு மையம் அமைக்கப்பட அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது  வடசேரி பகுதியில் ரூபாய்   30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நேர் மகேஷ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா துணை மேயர் மேரி பிரின்சி லதா, பொறியாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News