தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவம் வருகை

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்து உள்ளனர்.

Update: 2024-04-09 01:37 GMT

துணை ராணுவம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தூத்துக்குடி தொகுதியில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, 4 கம்பெனி துணை ராணுவ படையினர் (ரெயில்வே பாதுகாப்பு படை) மற்றும் 2 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் என  மொத்தம் 600 பேர் தூத்துக்குடிக்கு வந்து உள்ளனர்.
Tags:    

Similar News