ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு 4 பேர் சுயேட்சையாக மனுதாக்கல்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு 4 பேர் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தனர்.

Update: 2024-03-22 17:24 GMT

மனுதாக்கல்

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ம் தேதி வாக்குப்பதிவு ஜூன் 4 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கலுக்கு தயாரகி வருகிறது.இதனிடையே இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் , ஈரோடு சோளங்கபாளையத்தில் வசிக்கும் கோவைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் லட்சுமி நகரைச் சேர்ந்த விஜய் சூர்யா ஆகிய மூன்று பேரும் ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கராவிடம் மனுத்தாக்கல் செய்தனர்.இதே போல் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சிவகிரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனுதாக்கல் செய்தனர்.ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று மட்டும் 4 பேர் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தனர்
Tags:    

Similar News