மோகனூர் ராகவேந்திரர் ஆலயத்தில் வியாசராஜாரின் 427 ஆராதனை விழா

மோகனூர் காவிரிக்கரையில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்திரர் சுவாமி மட ஆலயத்தில் இன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வியாசராஜாரின் 427 ஆம் ஆண்டு ஆராதனையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-03-29 13:56 GMT

ஆராதனை விழா 

நாமக்கல் மாவட்டம் , மோகனூர் காவிரிக்கரையில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்திரர் சுவாமி மட ஆலயத்தில் இன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வியாசராஜாரின் 427 ஆம் ஆண்டு ஆராதனையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீராகவேந்திர், பிரகலாதன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நறுமண மலர்கள், துளசி கொண்டு அர்ச்சனையும் பின் பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மங்கள ஆர்த்தி மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. அப்போது ஸ்ரீராகவேந்திரர் பக்தி பாடல்கள் பாடப்பட்டன இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ஸ்ரீராகவேந்திர சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News