மாமன்னர் திருமலை நாயக்கரின் 441வது குருபூஜை விழா

மாமன்னர் திருமலை நாயக்கரின் 441வது குருபூஜை விழா திண்டுக்கல்லில் நடந்தது. திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-01-25 11:36 GMT
மாமன்னர் திருமலை நாயக்கரின் 441வது குருபூஜை விழா திண்டுக்கல்லில் நடந்தது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு நாயுடு மகாலில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு வியாழக்கிழமையான இன்று காலை 10 மணி அளவில் திமுக சார்பில் பழனி எம் .எல். ஏ. ஐ. பி. செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், திமுக வர்த்தக அணி செயலாளர் ஜெயன், அம்பை ரவி உட்பட பலர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் கழகப் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி சீனிவாசன் ரவுண்ட் ரோடு நாயுடு மகாலில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News