மேல்மருவத்தூர் அருகே 5 கார்கள் மோதல்: 10பேர் காயம்

மேல்மருவத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக 5 கார்கள் ஒரு சொகுசு பேருந்து மோதிக் கொண்டதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Update: 2024-06-10 08:53 GMT

மோதிக் கொண்ட கார்கள்

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில்,முன்னாடி சென்ற கார் பிரேக் பிடித்ததில் பின்னால் வந்த மூன்று கார்களும் ஒரு சொகுசு பேருந்தும் பேருந்து பின்னால் வந்த காரும் பேருந்து மீதும் மோதியதில்,

இந்த தொடர் சங்கிலி விபத்தில் 5 கார்களில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதனால் கடும் போக்குவரத்து எரிச்சலுக்கு காணப்பட்டது.. கோடை விடுமுறை தொடர் விடுமுறை மற்றும் சுப நிகழ்ச்சியில் என பல விடுமுறை மற்றும் சுப நிகழ்ச்சிகளால் அதிகப்படியான வாகனங்கள் சென்னைக்கு படையெடுத்தனர்.

இந்த கடும் போக்குவரத்து பயணத்தால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இன்று மட்டும் பல இடங்களில் சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மூன்று இடங்களில் சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. உயிர் சேதம் ஏதும் இல்லை. இந்த வாகன விபத்துக்களால் போக்குவரத்து நெசில் காணப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்... பயணிகள் யாவரும் கால தாமதமாக வீடு செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News