5 லட்சம் மதிப்பில் புதிய நாடக மேடை அடிக்கல் நாட்டு விழா

5 லட்சம் மதிப்பில் புதிய நாடக மேடை அடிக்கல் நாட்டு விழாவை ஆரணி எம் எல் ஏ சேவூர் S ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

Update: 2024-02-23 06:40 GMT

அடிக்கல் நாட்டு விழா

செய்யாறு அருகே கொருக்காத்தூர் ஊராட்சி ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து‌ சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர், சேவூர்.S.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார், செய்யார் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அருக்காவூர் M.அரங்கநாதன், ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் E.ஜெய்பிரகாஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் C.குணசேகரன்,ஒன்றிய கழக நிர்வாகிகள் செல்வி தாஸ், ராஜ்குமார்,பெருமாள், சரவணன்,செல்வராஜ், பொதுமக்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News