பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது!

வந்தவாசி அருகே பணம் வைத்து சூதாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-28 08:46 GMT

பைல் படம் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் கிராமப் பகுதிகளில் உதவி காவல் ஆய்வாளர்கள் மோகன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மழையூர் கிராமத்தில் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை வந்தவாசி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News