50 ஆண்டுகள் பழமையான மரம் தீப்பற்றி எரிந்து சேதம்
பழையூரில் 50 ஆண்டுகள் பழைமையான மரம் தீப்பற்றி எரிந்து சேதமானது;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பழையூர் நாகப்பகுதியில் ஊரணி கரையோரத்தில் இருந்த 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான புளிய மரம் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டு எரிந்து சேதமடைந்துள்ளது. மரத்தில் தீவைக்கப்பட்ட தகவல் உடனடியாக மானாமதுரை தீயணைப்புத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இருந்தும் மரம் முழுவதுமாக எரிந்து சேதமானது.