கொங்கணாபுரத்தில் தேங்காய் பருப்பு ரூ.5.90 லட்சத்திற்கு விற்பனை

கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கிளை சங்கத்தில் தேங்காய் பருப்பு ரூ.5.90 லட்சத்திற்கு விற்பனையானது.

Update: 2024-05-11 03:18 GMT

பைல் படம்

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 5.90 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு (கொப்பரை) விற்பனையானது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை இன்று நடைப்பெற்ற தேங்காய் பருப்பு (கொப்பரை) டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு சுமார் 161  தேங்காய் பருப்பு (கொப்பரை) மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம்  93 லாட்டுகளாக  வைத்து ஏலம் விடப்பட்டது.

ஏல மதிப்பு ரூ 5.90 இலட்சம் ரூபாய் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு ரூ 81.15 முதல் ரூ92.65 வரையிலும், இரண்டாம் தரம் ரூ 66.65 முதல் 79.35 வரையில் விற்று தீர்ந்தது. அடுத்த டெண்டர் 17.05 24 வெள்ளிகிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News