ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது!!

சிவகாசியில் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-01 11:40 GMT

கைது

சிவகாசியில் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம்,இவரது மனைவி பழனியம்மாள்,இருவரும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இவர்களுக்கு ஆனந்தவள்ளி(27) என்ற மகளும்,ஆதித்யா(14) என்ற மகனும் இருந்தனர்.ஆனந்த வள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா என்ற 2 மாத குழந்தை உள்ளது.ஆதித்யா 8ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கடந்த 22ம் தேதி இரவு ஆதித்யா, ஆனந்தவள்ளி,சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு லிங்கம்,பழனியம்மாள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போலீஸ் விசாரணையில்,கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு,மிரட்டலால் தான் தற்கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார்.

மேலும் கடன் கொடுத்தவர்களில் 6 பேரை திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வரவழைத்து டி.எஸ்.பி சுப்பையா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில் அருண்குமார்,கிருஷ்ணன், வி.முருகன்,எஸ்.முருகன்,மணி வண்ணன்,ரமேஷ்குமார் ஆகிய 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல்,உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News