குறைதீர் முகாமில் 690 மனுக்கள்

கடலூரில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் 690 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2024-02-15 01:45 GMT

குறைதீர் முகாம் 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 690 மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News