70 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

70 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.;

Update: 2025-03-14 07:29 GMT
அரியலூர், மார்ச் 14- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. ஆண்டிமடம் அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புரோஸ்(60). கடந்த 2022 இவர், 16 வயது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், அன்பரோஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி அன்புரோஸ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து அன்புரோஸ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்..

Similar News