80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை

80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை

Update: 2024-07-28 10:35 GMT
80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை
விருதுநகர் அருகே ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பில் துணை மேலாளர் வீட்டில் 80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மற்றும் மூன்று பேரை கைது செய்து நகைகளை மீட்டெடுக்க மத்திய பிரதேசத்தில் போலீசார் முகாமிட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பில் அந்நிறுவனத்தின் துணை மேலாளர் பாலமுருகன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 13ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 80 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இதுகுறித்து பாலமுருகன் வச்சகாரப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக தனி படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை அடையாளம் கண்ட போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிப்பதற்காக மத்தியபிரதேசம் சென்ற சிவகாசி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டது. இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மத்திய பிரதேசம் மாநிலம் பகோலி தார் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான பார்சிங் என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் பார் சிங்கை விருதுநகர் வச்ச காரப்பட்டி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மற்ற மூன்று கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்க தனிப்படை மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார். இக்கொள்ளை சம்பவம் நிகழ்ந்த தினத்தில் விருதுநகருக்கு ஆளுநர் ரவி காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையின் விருந்தினர் மாளிகையில் தங்கி சென்றார். பலத்த பாதுகாப்பு இருந்த நிலையிலும் அன்று இரவே அந்த தொழிற்சாலையின் குடியிருப்பில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News