மேலப்பாளையத்தில் 12 வயது சிறுவன் மாயம்

மேலப்பாளையத்தில் 12 வயது சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-05-05 15:54 GMT

மாயமான சிறுவன்

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் புதுமனை தெருவை சேர்ந்த செய்யது அலி என்பவரின் 12 வயது மகன் அர்ஷத் கான் இன்று (மே 5) விளையாட வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News