பொது மக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது

Update: 2023-12-12 08:29 GMT

கூண்டில் சிக்கிய கரடி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பந்தலூர், பெருங்கறை, இரும்பு பாலம்,உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த கரடி வீட்டின் கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரிடம் கிராம மக்கள் கோரிக்கையும் விடுத்தனர். இந்நிலையில் அத்தி மாநகர் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சரியாக இரவு 11 மணியளவில் உலா வந்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் கூண்டில் சிக்கிய கரடி முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.
Tags:    

Similar News