கரூர் அருகே சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கரூர் அருகே சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2024-04-22 13:01 GMT

தீப்பிடித்து எரிந்த கார்

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி அருகே உள்ள கே.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அரங்கன் மகன் முத்து செல்வம். இவர் ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 3 மணி அளவில், கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது கார், கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைக்குட்பட்ட, ஏமூர் பாலம் அருகே சென்றபோது, இன்ஜினியிலிருந்து புகை வருவதை அறிந்து, காரை சாலையோரமாக நிறுத்தி, இன்ஜின் பகுதியில் பார்வையிட்டார். அப்போது, திடீரென இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் தீ மல மல என பரவி கார் முழுவதும் எரிந்து முற்றிலும் நாசமானது.

இதுகுறித்து வெள்ளியணை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு, எரிந்து போன காரின் மதிப்பு ரூபாய் 2 லட்சம் இருக்கும் இந்த மதிப்பீடு செய்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News