முன்விரோத தகராறு மூன்று பேர் மீது வழக்கு

ரிஷிவந்தியத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தராறில்ல் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-25 06:30 GMT

ரிஷிவந்தியத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கீதா, 48; இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி மனைவி ஜெகதீஸ்வரி, 40; இடையே பொதுப்பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 18ம் தேதி பாதையில் குப்பையை கூட்டி வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஜெகதீஸ்வரி அவரது உறவினரான கண்ணன் மகன் முனுசாமி இருவரும் கீதாவை தாக்கினர். கீதா கொடுத்த புகாரின் பேரில், ஜெகதீஸ்வரி, முனுசாமி ஆகியோர் மீது திருப்பாலபந்தல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News