ஓட்டல் ஊழியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஹோட்டல் ஊழியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-02 15:11 GMT

கோப்பு படம்

கோவை பந்தய சாலை பகுதியில் நட்சத்திர ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட அந்த விடுதிக்கு வந்த சில வாலிபர்கள் தங்களை அனுமதிக்கும்படி ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.

இரவு 12 மணிக்கு மேல் அனுமதி இல்லை என ஊழியர்கள் கூறியதால் வாக்குவாதம் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பிரபாகரன் என்ற ஹோட்டல் ஊழியரை தாக்கியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் அங்கு கூட்டம் கூடயது குறித்து தகவல் அறிந்த பந்தய சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை கலைத்தனர்.ஹோட்டல் ஊழியர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவப்பிரசாத் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதே விடுதியில் அனுமதி மறுத்த காரணமாக மோதல் ஏற்பட்டு வழக்குப்பதிவு செய்யபட்டது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News