கரூர் அருகே வாகனத்தை ரிவர்ஸ் எடுத்தபோது குழந்தை மீது மோதி உயிரிழப்பு

கரூர் அருகே பொலிரோ வாகனத்தை ரிவர்ஸ் எடுத்தபோது குழந்தை மீது மோதி உயிரிழந்தது.;

Update: 2024-05-04 15:27 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, க. பரமத்தி அம்மன் நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பிரபு மகன் ஆதிரன் வயது 2. குழந்தை ஆதிரன் மே 3ஆம் தேதி காலை 7 மணி அளவில், அவரது வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகிலுள்ள

காருடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர், அவரது பொலிரோ மேக்ஸ் ட்ரக் வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி இருந்ததை எடுக்க முற்பட்டார். வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ரிவர்ஸ் எடுத்து உள்ளார்.

Advertisement

அப்போது ஆதிரன் பின்னால் நிற்பதை அறியாமல் ரிவர்ஸ் எடுத்ததால், ஆதிரன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தை ஆதிரனுக்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை மீட்டு கரூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் இன்றி குழந்தை ஆதிரன் உயிரிழந்தார். இ

ந்த சம்பவம் குறித்து பிரபு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த குழந்தை ஆதிரனை உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டிய ராமசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News