மோட்டார் சைக்கிளில் சென்ற போது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி !
மோட்டார் சைக்கிளில் சென்ற போது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-08 10:28 GMT
விபத்து
சேலம் சூரமங்கலத்தை சோளம்பள்ளம் வீரகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் மனோஜ்குமார் (வயது 20). நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் செவ்வாய்பேட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென பிரேக் பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தில் இருந்து மனோஜ்குமார் தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் உடனடியாக அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.