கல்லுாரி மாணவி மாயம் பெற்றோர் போலீசில் புகார்!

கல்லுாரி மாணவி மாயம் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2024-07-04 05:39 GMT

கல்லுாரி மாணவி மாயம்

திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட் டியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் மகாலட்சுமி (19). புதுக்கோட்டை அருகே உள்ள கலை அறிவியல் கல்லுாரியில் பிஏ படித்து வந்தார். சம்ப வத்தன்று கல்லுாரி செல்வதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாணை மேற் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News