மூச்சு திணறல் ஏற்பட்டு ஒப்பந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

மார்த்தாண்டம் அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2024-03-31 11:17 GMT

காவல் நிலையம் 

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் வாழவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராம லிங்கம் மகன் சதீஷ்.இவர் மதுரை உரங்கல்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழி யராக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு தற்பொழுது சொந்த ஊர் வந்திருந்தார். இந்நிலையில்நேற்று முன்தினம் இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது.

உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி கொண்டு. செல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News