சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்க்கு மாரடைப்பு
பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற எடப்பாடியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு மாரடைப்பு.
Update: 2024-02-10 12:33 GMT
பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற எடப்பாடியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் திருக்கோயில் ஆம்புலன்ஸில் எவ்வித வசதிகளும் இல்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.