தலையில் கல்லை போட்டு மாற்றுத்திறனாளி பெண் கொலை

இருப்பாளி அருகே தலையில் கல்லை போட்டு மாற்றுத்திறனாளி பெண் கொலை செய்த மர்ம நபர். போலீசார் தீவிர விசாரணை.

Update: 2024-02-12 12:09 GMT

தலையில் கல்லை போட்டு மாற்றுத்திறனாளி பெண் கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட, இருப்பாளி அருகே உள்ள குருக்குபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாயி (50). மாற்று திறனாளி பெண் இவர் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி, இவரது கணவர் மாணிக்கம், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மாணிக்கம் அண்மையில் இறந்துவிட்ட நிலையில், பெருமாயின் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குருக்குப்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் பெருமாயி மட்டும் தனியாக வசித்து வந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக படுத்திருந்த பெருமாயியை மர்ம நபர்கள் யாரோ தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார், பெருமாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News