சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனருக்கு பத்தாண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் பத்தாயிரம் அபராதம் தர்மபுரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-06-26 02:11 GMT

சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனருக்கு பத்தாண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சேர்ந்த கார் ஓட்டுநர் ஜான் இவர் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியை ஜான் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அதியமான் கோட்டை காவல்துறையினர் கார் ஓட்டுனர் ஜானை கைது செய்து அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நேற்று தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இதில் கார் ஓட்டுனர் ஜான் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது இதனை அடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்துள்ளார்.

Tags:    

Similar News